Tuesday, June 17, 2008

பூவுக்கு கடிதம்

பூவே
பூவும் நானும் ஒன்றே
பூவை சூடுவது போல்
என்னையும் சூடிகொள்வாயா.

பூவே
பூவும் நானும் ஒன்றே
பூவோடு சேர்ந்த
நாரும் மணக்கும்
உன்னோடு சேர்ந்து
நானும் மணப்பேனா.

பூவே
பூவும் நானும் ஒன்றே
பூ சூரியனை பார்த்தவுடன்
மலரும் நான்
உன்னை பார்த்து
முகம் மலர்வேனா.

பூவே
பூவும் நானும் ஒன்றே
பூவை சரம் சரமாக
கட்டுவார்கள்
நான் உன்னை
கட்டிக்கொள்ள
சம்மதிப்பாயா.

No comments: