Tuesday, June 17, 2008

தலைவர்கள

நேற்றைய தலைவர்கள்
நல்ல மனிதர்கள்,
நல்லதையே செய்தவர்கள்,
தனக்காக மட்டுமல்லாமல்
பிறருக்காக வாழ்ந்தவர்கள்.

மக்கள் நன்றாக வாழ
வழிவகை செய்தவர்கள்,
சொன்னது மட்டுமல்லாமல்
சொன்ன வண்ணம்
வாழ்ந்து காட்டியவர்கள்.

மக்களுக்காக வாழ்ந்தவர்கள்,
மக்கள் மனதில்
நீங்கா
இடம் பெற்றவர்கள்.

நேற்றைய தலைவர்களின்
எதிர் மறையாய்
இன்றைய தலைவர்கள்,
தனக்காக மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய தலைவர்கள்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
பணம் என்னும் புல்லை
தின்னா நிஜ புலிகள்.

இன்றைய தலைவர்கள்
புலித்தோல் போர்த்திய
பசு என
பணம் மட்டுமே
வாழ்க்கை என
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தலைவர்கள்
நேற்றைய தலைவர்களாய்
மாறினால்

நாளைய பாரதம்
உலகத்தில் உள்ள
அனைத்து வல்லரசுகளிலும்
முதல்
வல்லரசு நாடாய் வரும்.

No comments: