Tuesday, June 17, 2008

அவளின் தீபாவளி

பொட்டு வெடியின் நிறத்தில்
அவளது நெற்றி பொட்டு
எனக்கு பிடிக்கும் என்பதால்.

மத்தாப்பு போல் மலர்கிறது
அவளது இரு உதடுகள்
எனது வருகையை எதிர்பார்த்து,

புஷ்வாணத்தின் வண்ணங்களாய்
அவளது முகத்தில் சந்தோசம்
நான் வருவேன் என்பதால்.

தரை சக்கரமாய்அவளது
இரு கண்கள் என்னையே
தேடிகொண்டிருக்கின்றன.

வானத்தில் வெடிக்கும்
வண்ண வண்ண வெடிகளாய்
அவளது மனம் மகிழ்ச்சியில்
தீபாவளி காலையில்
என்னை பார்த்ததால்.

No comments: