Tuesday, June 17, 2008

யார் பெரியவன

நான் தான் பெரியவன் அண்ணா
நான் தான் பெரியவன் தம்பி.

ஒரு தடவை பற்ற வைத்தாலே
கடைசிவரை ஒளி கொடுப்பவன் நான்.

எத்தனை தடவை பற்ற வைத்தாலும்
கடைசிவரை ஒளி கொடுப்பவன் நான்.

நான் என்னையே உருக்கிகொள்வதால்
இறைவன் உருகி ஏற்றுக் கொள்வான்.

நி உருகி இறைவனை அடைகிறாய்
நானே இறைவனாக காட்சியாகிறேன்.

உங்களை கொடுமையான கடுமையான
நெருப்பால் உருக்கி செய்வார்கள்.

அதிகமான துன்பத்தை ஏற்பதால்
அதிக நாட்கள் அழியாமல் இருக்கிறேன்.

நீங்கள் அதிக நாட்கள் இருப்பதால்
அதிகமான பாவத்தை சம்பாதிக்கிறீர்கள்.

நான் சென்று கொன்றால் பாவம்அ
வர்களே வந்து வெந்து இறந்தால்.

எனக்கு யாரும் எண்ணை
ஊற்றவும் தீண்டவும் வேண்டியதில்லை.

நி இரவில் மட்டுமே பயன்படுகிறாய்
நான் இரவிலும் விழாக்கலிலும் பயன்படுகிறேன்.

நான் என்னையே ஒளியாக கொடுப்பவன்
நீங்களோ எண்ணையை ஒளியாக கொடுப்பவர்.

நான் அழியாமல் ஒளி கொடுப்பவன்அ
தனாலேயே நிலையாக இருப்பவன்.

நீயும் தான் பெரியவன் மெழுகுவர்த்தி தம்பி
நீங்கள் தான் பெரியவர் குத்துவிளக்கு அண்ணா.

No comments: