Tuesday, June 17, 2008

நம்பிக்கை

விதை
தனக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்
என்ற நம்பிக்கையாலேயே
முளைக்கின்றது.

பாம்பு
தனது சட்டை வளரும்
என்ற நம்பிக்கையாலேயே
சட்டையை கழற்றுகிறது.

இயற்கை
தன்னை மனிதன் பாதுகாப்பான்
என்ற நம்பிக்கையாலேயே
செல்வத்தை வழங்குகிறது.

மனிதன்
அடுத்த நொடியும் வாழ்வோம்
என்ற நம்பிக்கையாலேயே
வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

No comments: