Tuesday, June 17, 2008

எதிர் மறை

பார்த்ததும் வந்தது காதல்
பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னவளை

முன்னால் சென்றாள் அவள்
பின்னால் சென்றேன் நான்

பயந்து வேகமாக சென்றாள்
தைரியமாக போனேன் பின்னால்

பார்த்தேன் பலதடவை அவளை
பார்க்கவில்லை ஓருதடவை கூட என்னை

சென்றது நாள் வாரங்களாக
செல்லவில்லை அவள் என் நினைவிலிந்து

அமைதியாக பார்த்தாள் திரும்பி
அமைதியில்லாமல் தவிக்கும் என்னை

நிம்மதியில்லாமலும் தூங்காமலும் நான்
நிம்மதியாகவும் தூங்காமலும் அவள்

நேரே செல்லும் அவளை
குருக்கே அழைத்தேன் நான்

சொன்னேன் என் காதலை
சொல்லாமல் தவிக்கவிட்டாள் என்னை

அழுகை வந்தது எனக்கு
சிரிப்பு வந்தது அவளுக்கு

சொன்னாள் காதலை கண்ஜாடையில்
சொல்லவியலாத ஆனந்தத்தில் நான்

கொடுத்தேன் ரோஜா அவளுக்கு
கொடுக்க வில்லை முத்தம் எனக்கு

பார்த்துவிட்டார் உறவினர் ஒருவர்
பார்க்கவில்லை நாங்கள் ஒரிருமாதம்

எதிர்த்தனர் காதலை பெற்றோர்
எதிர்க்கவில்லை நாங்கள் அவர்களை

சேரவிடாமல் தடுத்தார்கள் பெற்றோர்
செர்த்துவைத்தார்கள் நன்பர்கள் எங்களை

பிரிந்தே வாழ்ந்த நாங்கள்
சேர்ந்தே வாழ்கிறோம் திருமணத்தால்

எதிரியாக நினைத்த பெற்றோர்
ஒற்றுமைக்காக வாழ்த்தினர் எங்களை

சிந்திக்கவில்லை எப்படி காதல் வருமென்று
சிந்திக்கின்றேன் எப்படி வாழலாம் என.

No comments: