Tuesday, June 17, 2008

நிலவும் மேகமும்...

நிலா அவள்
மேகம் நான்
பிரகாசிக்கிறாள் அவள்
பின் தொடர்கிறேன் நான்.

தேய் பிறை என
தேய்கிறாள் அவள்
சாரல் என
சினுங்கினேன் நான்.

அமாவாசை என
மறைந்தாள் அவள்
புயல் என
அழுதேன் நான்.

வளர் பிறை என
வளர்கிறாள் அவள்
மழை என
ஆனந்தத்தில் நான்.

பௌர்ணமி என
பிரகாசமாய் அவள்
வெள்ளை மேகம் என
கானாமல் போன நான்.

No comments: