Tuesday, September 15, 2020

குரு வணக்கம்

யோககுடில்தந்த இறைவா போற்றி

யோககுடிலில் வாழ்ந்தும் தெரியாதவனுக்கு

யோககுடில் எதுவென உணர்த்த

யோககுடில்லமைத்த சிவயோகியே போற்றி


நிறைவாய் வாழ வழிகாட்டி

ஆழ்ந்த புரிதலைதரும் உன்பேச்சு

கேட்டவுடன் சுழிக்கும் முகம்

கேட்ககேட்க மகிழும் முகம்


உண்மையாக இறையை தேடினால்

அதற்க்கான சந்தர்ப்பத்தை தந்தஇறை

ஒன்றில் செல்கையில் அதைதாண்டி

செல்வதற்க்கான அனுபவத்தை தந்தஇறை


இறையிடமழ காட்டிணான் உன்னை

யோகத்தையடைய தந்தாய் ஐந்தை

செய்யசெய்ய புரிதலும் அமைதியும்

நன்றியில் நனைகின்றேன் உன்னால்


கொராணாகூட நன்மையே செய்தது

நேரலையில் உன் வகுப்பு

உண்மையான தேவையை புரிந்து

அடையலாம் தேவையானதை நிதானமாக


வாழ்வதற்க்காக தேவையை கொடுத்துள்ளான்

தேவை எதுவென தெரியாமல்

வருந்தும் இந்த மனிதருக்கு

தேவையை புரியவைக்கும் குருவே


கடவுளுக்கும் நமசிவாயத்திற்க்கும் தெய்வத்திற்க்கும்

மும்மூர்த்திகளுக்கும் கிருஷ்ணருக்கும் முருகருக்கும் 

இதிகாச புராணங்களுக்கும் எனக்கு

புரியும்படி விளக்கிய குருவே


எங்கும்நிறைந்த வெட்டவெளியே நன்றி

அனைத்தையும் ஆடவைக்கும் இசையே 

கொண்டாட்டமாக ஆடி ஆடவைக்கும்

பசுமைஇல்ல சிவயோகியே நன்றி.





No comments: